Naanum song lyrics


Movie: Navarasa 
Music : A R rahman
Vocals :  karthik
Lyrics :  Madhan karky
Year: 2021
Director: santhosh shivan
 


Tamil Lyrics

மயக்கும் மழலை மொழியோ
அவிழும் அருவி ஒலியோ
குவியும் குயிலின் குரலோ
தேயும் தேயும் இவள் முன்

குளம்பி கிளப்பும் மணமோ
புதினம் பிரிக்கும் மணமோ
துளசி இலையின் மணமோ
தேயும் தேயும் இவள் முன்

ஏன்? அதை நான் உணரவில்லை ஏன்?
ஏன்? உணர்ந்தும் திருந்தவில்லை?
நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது

ஓர் ஆணின் நாணமிது அன்பே!
நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது
என் வேறு கோணம் இது அன்பே!

இசை தேடி நீ வந்தாய்
இசை என்றென்னில் ஆனாய்
இசையின்றி என்னாவேன்?
இசையில்லா மண்ணாவேன்

திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்
மறந்தும் மீண்டும் செய்யேன்
செல்லாதே நீ
வா வா என்னிசையே!

நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது
என் வேறு கோணம் இது அன்பே

Leave a Comment